Sunday, February 04, 2007

கடவுளைக் கொல்

கண்ணிமைக்கும் நேரத்தில்
கடவுளைக் கொல்
மறுகணமே கடவுளாகு
பக்தனைக் கொல்
ஏழையை சிரிக்கவிடாதே
உன்னைக் கண்டுபிடித்துக்
கொன்றுவிடுவார்கள்
உண்மை என்பது ஒன்றுமல்ல
உன்னைப்பற்றிய புனைவுதான்

இரவுமுழுதும்
அவிழ்த்துப்போடு
கடித்துக் குதறு
மூடிவை
புத்தியை
யுக்தியை
பெண்களை
பகல்முழுதும்
மூடிவை

1 comment: